Thursday, September 13, 2012


நான் ஒரு கண்ணாடி

என்னை பார்த்து
நீ சிரித்தால்
நானும் சிரிப்பேன்

நீ அழுதால்
நானும் அழுவேன்

ஆனால்...

நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்

உடைந்து போவேன்...!

அது தான் நட்பு
காற்றும் நட்பும் ஒன்றே .காற்றை சுவாசிக்காமல் உயிர் வாழமுடியாது
நட்பை நேசிக்காமல் உயிர் ஏதும் கிடையாது -
இவ்வுலகில் உயிர் ஒன்று இருப்பின் - அது நட்போடு இருக்கும் !
நட்பொன்று இல்லையனில் - அது உயிரற்று கிடக்கும்
நட்பு என்பது சூரியன் அல்ல
தோன்றுவதற்கும் மறைவதற்கும்
நட்பு என்பது நிலவு அல்ல
வளர்வதற்கும் தேய்வதற்கும்
நட்பு என்பது காற்று அல்ல
தென்றலாவதற்கும் புயலாவதற்கும்
நட்பு என்பது மலர் அல்ல
மலர்வதற்கும் உதிர்வதற்கும்

இன்பத்தின் மறுபெயர்தான் நட்பு
துன்பத்தின் தொலைவிடம் தான் நட்பு
கடலின் ஆழத்தை விட மிக பெரியது தான் நட்பு
காதலை விட புனிதமானது தான் நட்பு
சகிப்பு தன்மை உடையது தான் நட்பு
மென்மையானது தான் நட்பு...............!